இந்தியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நகரில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அன்டோனோவ் ஆன்-32 என்ற விமானம் தரையிறங்கும்போது இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
