இந்தோனேசியாவில் 240 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று திடீரென தொடர்பை இழந்து மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுரபயா நகரிலிருந்து ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற கப்பல் 240 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் தலைநகரான பன்ஜார்மாசின் நோக்கி இந்தக் கப்பல் பயணித்துள்ளது.
ஜாவா கடல் பகுதியில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், பன்ஜார்மாசின் நகரிலிருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது திடீரென அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
