ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் “புதிய விதிகளை” அறிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கை உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உத்தரவின் பேரில் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் “ஈரானின் கடற்கரையின் ஏறத்தாழ 2,000 கிலோமீற்றர் (1,243 மைல்கள்) பகுதியை” ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றும், இதன்மூலம் “இந்த நீர்நிலையானது ஈரான் மக்களுக்கு வாழ்வாதாரமாகவும், பிராந்தியத்திற்குப் பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் அமையும் என ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.