கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை, அக்கட்சியின் அனைத்து செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் விஜயபவானந்தா யாழ்ப்பாணத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில சில்லறைகளின் சில்லறைத்தனமான செயற்பாடுகளால், இன விடுதலைக்காகப் போராடிய பெரும் அமைப்பு சீரழிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், பாலியல் விவகாரத்தில் சிக்குண்ட பின்னரும் செல்வம் அடைக்கலநாதன் கெஞ்சிப் பெற்ற கால அவகாசத்தைப் பயன்படுத்தி தனது தலைமைப் பதவியைத் தக்கவைத்துள்ளதாகச் சாடினார்.
