ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும்.அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை தக்க வைக்க முற்படக்கூடாதென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
செல்வம் அடைக்கலநாதனின் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் தொடடர்பில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்.ஊடக அமையத்தில் இன்று முன்வைத்திருந்தனர்.
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தலைமையில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும்.அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை தக்க வைக்க முற்படக்கூடாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே கட்சியின் உள்ளுராட்சி மன்ற தலைவர்களை முன்னிறுத்தி போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை தக்க வைக்க முற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
