வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டு மகோற்சவ இரதோற்சவம் இன்று (27) வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் தேரில் எழுந்தருளி, ஆலய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரதோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
நாளை (28) நடைபெறவுள்ள கடல்த் தீர்த்தோற்சவத்துடன் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவடையவுள்ளது.
