அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தனது தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இரு அமெரிக்க அதிகாரிகளும் சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத் புறப்பட உள்ளனர் என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தாம் இஸ்லாமாபாத் செல்வதாக அவர் கூறியபோதிலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை அவர் உறுதிப்படுத்தவில்லை.
இது ஒரு பயனுள்ள உரையாடலாக அமையும் என்றும், இதன் மூலம் ஒரு ஒப்பந்தத்தை நோக்கி முன்னேற்றம் ஏற்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று லீவிட் கூறினார்.
துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் பயணம் செய்ய மாட்டார் என்றும், ஆனால் அவர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஆழமாக ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.