எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக் குளங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 19 அடியாகக் குறைந்துள்ளதுடன், மாவட்டத்தின் ஏனைய குளங்களிலும் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக பல சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதால், கால்நடைகளும் நீரின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
