ஜப்பானின் மிக உயரமான மலையில், தனது மகனை ஒரு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டியுடன் பல மணி நேரம் தனியாக விட்டுச் சென்றதற்காக, ஒரு தந்தை காவல்துறையினரால் கண்டிக்கப்பட்டுள்ளார்.
மூடுபனி மற்றும் மழை சூழ்ந்த நிலையில், ஃபூஜி மலையில் 2,000 மீட்டருக்கும் (6,500 அடி) அதிகமான உயரத்தில் அமைந்துள்ள ஒரு இடத்தில், அந்த ஏழு வயது சிறுவன் காணப்பட்டுள்ளான்.
தனக்கு சோர்வாக இருப்பதாக அந்தச் சிறுவன் கூறியபோது, அவனது 48 வயது தந்தை, அவனை “இங்கேயே காத்திரு” என்று கூறிவிட்டு, தனது மூத்த மகனுடன் மலையேற்றத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
உச்சியை நோக்கிய மலையேற்றப் பாதையின் ஆறாவது நிலையத்திற்கு அருகில், ஒரு மலைக்குடிசையின் ஊழியர்கள் அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
