அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு தலையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
புதிய சிங்கள உரிமைக் கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர மற்றும் ஓய்வுபெற்றோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேரா ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
22ஆவது திருத்தச் சட்டமூலம் சட்டப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், சர்வஜன வாக்கெடுப்பு இன்றி அதனை நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
