காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
இப்படி இருக்கையில், மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தை தொடர்ந்து, அங்கு மீண்டும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காத்மாண்டுவில் இயங்கி வரும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
