ஈரானில் உள்ள தனது தூதரகத்தை படிப்படியாக மீண்டும் திறந்து வருவதாகவும், இந்த வாரம் அங்கு ஒரு சிறிய தூதர்கள் குழுவை அனுப்பியுள்ளதாகவும் சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடர்பான பாதுகாப்பு கவலைகள் காரணமாக, தெஹ்ரானில் உள்ள தூதரகம் மார்ச் 11 அன்று தற்காலிகமாக மூடப்பட்டது.
நீண்டகாலமாக ஆயுத நடுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான அனைத்து புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களையும் இடைநிறுத்தியுள்ளதுடன், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காகத் தனது வான்வெளியையும் கட்டுப்படுத்தியுள்ளது.